பேராசிரியரின் அணிந்துரை |
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் எனத்தெளிந்து |
உள்ளத்தில் ஊறிடும் எண்ணமெலாம் ஆய்ந்தே |
தள்ளத்தகுவது மதவழிக் கற்பனையென ஓர்ந்து |
கொள்ளத்தகுவது ஒப்புரவு நெறியென்றார் வள்ளுவர்! |
சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் எனினும் |
பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் எனச்சாற்றி, |
பிறவிவழியாம் வருணத்துக் கொருநீதி புகன்றிடும் |
அறக்கேடாம் மநுவாதிசூது மறுத்திட்டார் வள்ளுவர்! |
சிறப்புடன் செல்வமீனும் அறத்தினூங்கு ஆக்கமில்லை |
மறத்தலின் கேடில்லை; மாசற்றமனச் சான்றூறும் |
திறத்தினாவது இன்பம்; அழுக்காறு அவாவெகுளி |
புறத்ததா, இன்னாச்சொல் தவிர்தலே அறமெனவும்; |
தீதற்ற பொருளாக்கம் முயற்சியின் பயனெனவும், |
கோதற்ற காதலின்பம் உற்றதுணையின் உறவெனவும் |
சூதற்ற அகத்துறவு ஐம்புலனடக்க விளைவெனவும் |
ஏதமிலாப் பெருவாழ்வின் நெறிகண்டார் வள்ளுவர்! |
இறை, தெய்வம் கடவுளெனப் போற்றிடுவார், |
நிறைகுணப் பேறெய்தும் 'தொழல்' எதுவெனவும், |
மறுபிறவி, ஆன்மா, துறக்கமென நம்பிடுவார் |
உறுபிறவிப் புகழெய்தும் 'நெறி' எதுவெனவும், |
உற்றபிறப்பே 'கருமவினை' தலைவிதியென நம்புவார் |
உற்றிடுமியற்கைச் சூழலின் விளைவே 'ஊழ்' எனவும் |
உணர்வுடையார் உளமருள் நீங்கியே தெருளுமாறு |
உலகவர் வாழ்வுக்கு உறுதுணையாவது முப்பால்! |
வான்றோய் முகில்பொழி தூநீர் அனையதாய் |