56. | தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற |
| சொற்காத்துச் சோர்விலாள் பெண். |
|
கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு,தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண். |
57. | சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் |
| நிறைகாக்கும் காப்பே தலை. |
|
தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும். |
58. | பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் |
| புத்தேளிர் வாழும் உலகு. |
|
நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ்சிறப்பாக அமையும். |
59. | புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன் |
| ஏறுபோல் பீடு நடை. |
|
புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள். |
60. | மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் |
| நன்கலம் நன்மக்கட் பேறு. |
|
குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது. |