66. | குழலினி தியாழினி தென்பதம் மக்கள் |
| மழலைச்சொல் கேளா தவர். |
|
தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள். |
67. | தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து |
| முந்தி இருப்பச் செயல். |
|
தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும். |
68. | தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து |
| மன்னுயிர்க் கெல்லாம் இனிது. |
|
பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும். |
69. | ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் |
| சான்றோன் எனக்கேட்ட தாய். |
|
நல்ல மகனைக் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள். |
70. | மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை |
| என்நோற்றான் கொல்லெனும் சொல். |
|
"ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெரும்பேறு", என்று ஒரு மகன் புகழப் படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக் கூடிய கைம்மாறு எனப்படும். |