8. அன்புடைமை |
71. | அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் |
| புன்கணீர் பூசல் தரும். |
|
உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டு விடும். |
72. | அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் |
| என்பும் உரியர் பிறர்க்கு. |
|
அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர். |
73. | அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு |
| என்போ டியைந்த தொடர்பு. |
|
உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும். |
74. | அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும் |
| நண்பென்னும் நாடாச் சிறப்பு. |
|
அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும். அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும். |
75. | அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து |
| இன்புற்றார் எய்தும் சிறப்பு. |
|
உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம். |