76. | அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் |
| மறத்திற்கும் அஃதே துணை. |
|
வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள். |
77. | என்பி லதனை வெயில்போலக் காயுமே |
| அன்பி லதனை அறம். |
|
அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காத வரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும். |
78. | அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் |
| வற்றல் மரந்தளிர்த் தற்று. |
|
மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலை வானத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது. |
79. | புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை |
| அகத்துறுப் பன்பி லவர்க்கு. |
|
அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்? |
80. | அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு |
| என்புதோல் போர்த்த உடம்பு. |
|
அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும். |