பக்கம் எண் :

இல்லறவியல்18கலைஞர் உரை

86.

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு.

 

வந்த      விருந்தினரை    உபசரித்து    அவர்களை    வழியனுப்பி
வைக்கும்போதே,     மேலும்    வரக்கூடிய   விருந்தினரை  ஆவலுடன்
எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில்   இருப்போர்   நல்ல  விருந்தினன்
என்று வரவேற்றுப் போற்றுவர்.
 

87.

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்

துணைத்துணை வேள்விப் பயன்.

 

விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப்பார்த்து  விருந்தோம்பலை
ஒரு வேள்வியாகவே கருதலாம்.
 

88.

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி

வேள்வி தலைப்படா தார்.

 

செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல்
எனும்   வேள்விக்கு   அது  பயன்படுத்தப்படாமற்   போயிற்றே    என
வருந்துவார்கள்.
 

89.

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா

மடமை மடவார்கண் உண்டு.

 

விருந்தினரை    வரவேற்றுப்  போற்றத்  தெரியாத   அறிவற்றவர்கள்
எவ்வளவு     பணம்      படைத்தவர்களாக   இருந்தாலும்   தரித்திரம்
பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
 

90.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.

 

அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது.அதுபோல்
சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்.