12. நடுவு நிலைமை |
111. | தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் |
| பாற்பட் டொழுகப் பெறின். |
|
பகைவர், அயலோர், நண்பர் எனப் பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக் கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும். |
112. | செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி |
| எச்சத்திற் கேமாப் புடைத்து. |
|
நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும். |
113. | நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை |
| அன்றே யொழிய விடல். |
|
நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும். |
114. | தக்கார் தகவிலர் என்ப தவரவர் |
| எச்சத்தாற் காணப் படும். |
|
ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப் போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும். |
115. | கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் |
| கோடாமை சான்றோர்க் கணி. |
|
ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும். |