13. அடக்கம் உடைமை |
121. | அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை |
| ஆரிருள் உய்த்து விடும். |
|
அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும். |
122. | காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் |
| அதனினூஉங் கில்லை உயிர்க்கு. |
|
மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும்.அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை. |
123. | செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந் |
| தாற்றின் அடங்கப் பெறின். |
|
அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும். |
124. | நிலையின் திரியா தடங்கியான் தோற்றம் |
| மலையினும் மாணப் பெரிது. |
|
உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும். |
125. | எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் |
| செல்வர்க்கே செல்வம் தகைத்து. |
|
பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும். ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும். |