பக்கம் எண் :

இல்லறவியல்26கலைஞர் உரை

126.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து.

 

உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல்
ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம்    வாழ்க்கைக்குக்
காவல் அரணாக அமையும்.
 

127.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

 

ஒருவர்  எதைக்  காத்திட  முடியாவிட்டாலும்  நாவையாவது அடக்கிக்
காத்திட  வேண்டும்.  இல்லையேல்   அவர்  சொன்ன  சொல்லே  அவர்
துன்பத்துக்குக் காரணமாகிவிடும்.
 

128.

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

நன்றாகா தாகி விடும்.

 

ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும்  சொற்களில்   ஒரு சொல்
தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும்,  அந்தப்   பேச்சில்
உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்.
 

129.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு.

 

நெருப்பு  சுட்ட  புண்கூட  ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு
திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது.
 

130.

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

 

கற்பவை  கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும்  பண்பு  கொண்டவரை
அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்.