136. | ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின் |
| ஏதம் படுபாக் கறிந்து. |
|
மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள். |
137. | ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின் |
| எய்துவ ரெய்தாப் பழி. |
|
நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும். |
138. | நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம் |
| என்றும் இடும்பை தரும். |
|
நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும். தீயொழுக்கம், தீராத துன்பம் தரும். |
139. | ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய |
| வழுக்கியும் வாயாற் சொலல். |
|
தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும். |
140. | உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங் |
| கல்லா ரறிவிலா தார். |
|
உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள். |