பக்கம் எண் :

இல்லறவியல்30கலைஞர் உரை

146.

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண்.

 

பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை,
தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை.
 

147.

அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலாள்

பெண்மை நயவா தவன்.

 

பிறன்   மனைவியிடம்   பெண்மை  இன்பத்தை நாடிச் செல்லாதவனே
அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்.
 

148.

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்

கறனொன்றோ ஆன்ற வொழுக்கு.

 

வேறொருவன்    மனைவியைக்   காம   எண்ணத்துடன்   நோக்காத
பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்.
 

149.

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்

பிறற்குரியாள் தோள்தோயா தார்.

 

பிறன்  மனைவியின்  தோளைத்  தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின்
பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர்.
 

150.

அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்

பெண்மை நயவாமை நன்று.

 

பிறன்  மனைவியை  விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர்
செயலைவிடத் தீமையானதாகும்.