பக்கம் எண் :

திருக்குறள்31அறம்

16. பொறையுடைமை
 

151.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

 

தன்மீது  குழி  பறிப்போரையே  தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை
இகழ்ந்து   பேசுகிறவர்களின்   செயலையும்  பொறுத்துக்     கொள்வதே
தலைசிறந்த பண்பாகும்.
 

152.

பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை

மறத்த லதனினும் நன்று.

 

அளவுகடந்து   செய்யப்பட்ட    தீங்கைப்   பொறுத்துக் கொள்வதைக்
காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்.
 

153.

இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்

வன்மை மடவார்ப் பொறை.

 

வறுமையிலும்    கொடிய   வறுமை; வந்த  விருந்தினரை   வரவேற்க
முடியாதது. அதைப்போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின்
செயலைப் பொறுத்துக் கொள்வது.
 

154.

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை

போற்றி யொழுகப் படும்.

 

பொறுமையின்   உறைவிடமாக  இருப்பவரைத்தான் நிறைவான மனிதர்
என்று உலகம் புகழும்.
 

155.

ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்

பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

 

தமக்கு   இழைக்கப்படும்   தீமையைப்   பொறுத்துக் கொள்பவர்களை
உலகத்தார்   பொன்னாக   மதித்துப்     போற்றுவார்கள்.    பொறுத்துக்
கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்.