156. | ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் |
| பொன்றுந் துணையும் புகழ். |
|
தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒருநாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்போருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும். |
157. | திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந் |
| தறனல்ல செய்யாமை நன்று. |
|
பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி; பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும். |
158. | மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந் |
| தகுதியான் வென்று விடல். |
|
ஆணவங்கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம். |
159. | துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய் |
| இன்னாச்சொல் நோற்கிற் பவர். |
|
எல்லை கடந்து நடந்துகொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள். |
160. | உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் |
| இன்னாச்சொ னோற்பாரிற் பின். |
|
பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில்தான் வைத்துப் போற்றப்படுவார்கள். |