17. அழுக்காறாமை |
161. | ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத் |
| தழுக்கா றிலாத இயல்பு. |
|
மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும். |
162. | விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும் |
| அழுக்காற்றின் அன்மை பெறின். |
|
யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை. |
163. | அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் |
| பேணா தழுக்கறுப் பான். |
|
அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான். |
164. | அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் |
| ஏதம் படுபாக் கறிந்து. |
|
தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறைமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள். |
165. | அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார் |
| வழுக்கியுங் கேடீன் பது. |
|
பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும். |