176. | அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் |
| பொல்லாத சூழக் கெடும். |
|
அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும். |
177. | வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் |
| மாண்டற் கரிதாம் பயன். |
|
பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது. |
178. | அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை |
| வேண்டும் பிறன்கைப் பொருள். |
|
தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும். |
179. | அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந் |
| திறனறிந் தாங்கே திரு. |
|
பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும். |
180. | இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும் |
| வேண்டாமை யென்னுஞ் செருக்கு. |
|
விளைவுகளைப்பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும். |