206. | தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால |
| தன்னை அடல்வேண்டா தான். |
|
வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத் தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும். |
207. | எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை |
| வீயாது பின்சென் றடும். |
|
ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும். |
208. | தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை |
| வீயா தடியுறைந் தற்று. |
|
ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும். |
209. | தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந் |
| துன்னற்க தீவினைப் பால். |
|
தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது. |
210. | அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித் |
| தீவினை செய்யான் எனின். |
|
வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க. |