பக்கம் எண் :

திருக்குறள்43அறம்

22. ஒப்புரவறிதல்
 

211.

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்

டென்னாற்றுங் கொல்லோ உலகு.

 

கைம்மாறு     கருதி   மழை    பொழிவதில்லை;   அந்த மழையைப்
போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.
 

212.

தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு.

 

தகுதியுடையோர்   நலனுக்கு  உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று
திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.
 

213.

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே

ஒப்புரவின் நல்ல பிற.

 

பிறர்க்கு  உதவிடும்    பண்பாகிய  "ஒப்புரவு"  என்பதைவிடச் சிறந்த
பண்பினை    இன்றைய  உலகிலும்,  இனிவரும் புதிய உலகிலும் காண்பது
அரிது.
 

214.

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்.

 

ஒப்புரவை   அறிந்து  பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக்
கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு  மாறானவன்
இறந்தவனே ஆவான்.
 

215.

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு.

 

பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர்
மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப்
போன்றதாகும்.