226. | அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் |
| பெற்றான் பொருள்வைப் புழி. |
|
பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும். |
227. | பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந் |
| தீப்பிணி தீண்ட லரிது. |
|
பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை. |
228. | ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை |
| வைத்திழக்கும் வன்க ணவர். |
|
ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈவு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ? |
229. | இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய |
| தாமே தமிய ருணல். |
|
பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது. |
230. | சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் |
| ஈத லியையாக் கடை. |
|
சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது. |