24.புகழ் |
231. | ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல |
| தூதிய மில்லை உயிர்க்கு. |
|
கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை. |
232. | உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன் |
| றீவார்மேல் நிற்கும் புகழ். |
|
போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும். |
233. | ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற் |
| பொன்றாது நிற்பதொன் றில். |
|
ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை. |
234. | நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் |
| போற்றாது புத்தே ளுலகு. |
|
இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது. |
235. | நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும் |
| வித்தகர்க் கல்லால் அரிது. |
|
துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும். |