236. | தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் |
| தோன்றலின் தோன்றாமை நன்று. |
|
எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது. |
237. | புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை |
| இகழ்வாரை நோவ தெவன். |
|
உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள் அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக? |
238. | வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் |
| எச்சம் பெறாஅ விடின். |
|
தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழி யென்று வையம் கூறும். |
239. | வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா |
| யாக்கை பொறுத்த நிலம். |
|
புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும். |
240. | வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய |
| வாழ்வாரே வாழா தவர். |
|
பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும். புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான். |