பக்கம் எண் :

திருக்குறள்49அறம்

25. அருளுடைமை
 

241.

அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணு முள.

 

கொடிய   உள்ளம்   கொண்ட  இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில்
செல்வம்      குவிந்திருக்கலாம்; ஆனாலும்  அந்தச் செல்வம்    அருட்
செல்வத்துக்கு ஈடாகாது.
 

242.

நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால்

தேரினும் அஃதே துணை.

 

பலவழிகளால்    ஆராய்ந்து    கண்டாலும்    அருள்  உடைமையே
வாழ்க்கைக்குத் துணையாய் விளங்கும் நல்வழி எனக் கொள்ளல் வேண்டும்.
 

243.

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த

இன்னா உலகம் புகல்.

 

அருள்   நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த
துன்ப உலகில் உழலமாட்டார்.
 

244.

மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப

தன்னுயி ரஞ்சும் வினை.

 

எல்லா  உயிர்களிடத்தும்  கருணைகொண்டு அவற்றைக் காத்திடுவதைக்
கடமையாகக்   கொண்ட  சான்றோர்கள்   தமது உயிரைக் பற்றிக் கவலை
அடைய மாட்டார்கள்.
 

245.

அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு

மல்லன்மா ஞாலங் கரி.

 

உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை  உணராமல்
கடமையாற்றலாம்  என்பதற்கு,  காற்றின்    இயக்கத்தினால் வலிமையுடன்
திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று.