25. அருளுடைமை |
241. | அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் |
| பூரியார் கண்ணு முள. |
|
கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈடாகாது. |
242. | நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால் |
| தேரினும் அஃதே துணை. |
|
பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருள் உடைமையே வாழ்க்கைக்குத் துணையாய் விளங்கும் நல்வழி எனக் கொள்ளல் வேண்டும். |
243. | அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த |
| இன்னா உலகம் புகல். |
|
அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில் உழலமாட்டார். |
244. | மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப |
| தன்னுயி ரஞ்சும் வினை. |
|
எல்லா உயிர்களிடத்தும் கருணைகொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைக் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள். |
245. | அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு |
| மல்லன்மா ஞாலங் கரி. |
|
உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று. |