26. புலால் மறுத்தல் |
251. | தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் |
| எங்ஙனம் ஆளும் அருள். |
|
தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணை யுள்ளம் கொண்டவராக இருக்க முடியும். |
252. | பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி |
| ஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு. |
|
பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை; புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை. |
253. | படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன் |
| உடல்சுவை யுண்டார் மனம். |
|
படைக் கருவியைப் பயன்படுத்துவோர் நெஞ்சமும், ஓர் உயிரின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக் கூடியவைகள் அல்ல. |
254. | அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் |
| பொருளல்ல தவ்வூன் தினல். |
|
கொல்லாமை அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும். எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது. |
255. | உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண |
| அண்ணாத்தல் செய்யா தளறு. |
|
உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது;புலால் உண்ணாதவர்கள் இருப்பதால், பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன. |