256. | தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும் |
| விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில். |
|
புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லா திருப்பின், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார். |
257. | உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் |
| புண்ண துணர்வார்ப் பெறின். |
|
புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்க வேண்டும். |
258. | செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார் |
| உயிரின் தலைப்பிரிந்த ஊன். |
|
மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள். |
259. | அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் |
| உயிர்செகுத் துண்ணாமை நன்று. |
|
நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது. |
260. | கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி |
| எல்லா உயிருந் தொழும். |
|
புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும். |