276. | நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து |
| வாழ்வாரின் வன்கணா ரில். |
|
உண்மையிலேயே மனதாரப் பற்றுகளைத் துறக்காமல், துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லை. |
277. | புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி |
| மூக்கிற் கரியா ருடைத்து. |
|
வெளித் தோற்றத்துக்குத் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும், குன்றிமணியின் முனைபோலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு. |
278. | மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி |
| மறைந்தொழுகு மாந்தர் பலர். |
|
நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர். |
279. | கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன |
| வினைபடு பாலாற் கொளல். |
|
நேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும். வளைந்து தோன்றும் யாழ், இசை இன்பம் பயக்கும். அது போலவே மக்களின் பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து கொள்ள வேண்டும். |
280. | மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் |
| பழித்த தொழித்து விடின். |
|
உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும். |