286. | அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண் |
| கன்றிய காத லவர். |
|
ஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள். |
287. | களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும் |
| ஆற்றல் புரிந்தார்க ணில். |
|
அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது. |
288. | அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங் |
| களவறிந்தார் நெஞ்சில் கரவு. |
|
நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும். |
289. | அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல |
| மற்றைய தேற்றா தவர். |
|
களவு என்பதைத் தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள். |
290. | கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் |
| தள்ளாது புத்தே ளுலகு. |
|
களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது. |