32. இன்னா செய்யாமை |
311. | சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா |
| செய்யாமை மாசற்றார் கோள். |
|
மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குக் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும். |
312. | கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா |
| செய்யாமை மாசற்றார் கோள். |
|
சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும். |
313. | செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் |
| உய்யா விழுமந் தரும். |
|
யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும். |
314. | இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண |
| நன்னயஞ் செய்து விடல். |
|
நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும் படியாக அவருக்கு நன்மை செய்வதுதான். |
315. | அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் |
| தந்நோய்போற் போற்றாக் கடை. |
|
பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை. |