பக்கம் எண் :

துறவறவியல்64கலைஞர் உரை

316.

இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமை

வேண்டும் பிறன்கட் செயல்.

 

ஒருவன்  தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து
அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்.
 

317.

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்

மாணாசெய் யாமை தலை.

 

எவ்வளவிலும்,   எப்பொழுதும்,  எவரையும்  இழிவுபடுத்தும்  செயலை
மனத்தால்கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்.
 

318.

தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ

மன்னுயிர்க் கின்னா செயல்.

 

பிறர்  தரும்  துன்பத்தால்  தனக்கேற்படும்  துன்பத்தை  உணர்ந்தவன்
அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?
 

319.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா

பிற்பகல் தாமே வரும்.

 

பிறருக்குத்   தீங்கு  விளைத்துவிட்டோம்  என்று    ஒருவர் மகிழ்ந்து
கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்.
 

320.

நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்

நோயின்மை வேண்டு பவர்.

 

தீங்கு    செய்தவருக்கே   தீங்குகள்   வந்து சேரும்; எனவே தீங்கற்ற
வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.