33. கொல்லாமை |
321. | அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் |
| பிறவினை எல்லாந் தரும். |
|
எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும். |
322. | பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர் |
| தொகுத்தவற்று ளெல்லாந் தலை. |
|
இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக்கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை. |
323. | ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் |
| பின்சாரப் பொய்யாமை நன்று. |
|
அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றன. |
324. | நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங் |
| கொல்லாமை சூழும் நெறி. |
|
எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும். |
325. | நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக் |
| கொல்லாமை சூழ்வான் தலை. |
|
உலகியல் நிலையை வெறுத்துத் துறவு பூண்டவர் எல்லோரையும் விடக் கொலையை வெறுத்துக் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே சிறந்தவராவார். |