பக்கம் எண் :

துறவறவியல்66கலைஞர் உரை

326.

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்

செல்லா துயிருண்ணுங் கூற்று.

 

கொலை   செய்யாமையை   வாழ்வில்   அறநெறியாகக் கொண்டவரின்
பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்.
 

327.

தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி

தின்னுயிர் நீக்கும் வினை.

 

தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப்
போக்கும் செயலில் ஈடுபடக் கூடாது.
 

328.

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்

கொன்றாகும் ஆக்கங் கடை.

 

பெரிதாக   நன்மை  தரக்கூடிய   அளவுக்கு  ஒரு கொலை பயன்படக்
கூடுமெனினும்,   நல்ல   பண்புடைய    மக்கள்,    அந்த    நன்மையை
இழிவானதாகவே கருதுவார்கள்.
 

329.

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்

புன்மை தெரிவா ரகத்து.

 

பகுத்தறிவை   இழந்து  செயல்படும்   கொலைகாரர்களைச்  சான்றோர்
உள்ளம், இழிதகைப் பிறவிகளாகவே கருதும்.
 

330.

உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்

செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

 

வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே
கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்.