326. | கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் |
| செல்லா துயிருண்ணுங் கூற்று. |
|
கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும். |
327. | தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி |
| தின்னுயிர் நீக்கும் வினை. |
|
தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக் கூடாது. |
328. | நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக் |
| கொன்றாகும் ஆக்கங் கடை. |
|
பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள். |
329. | கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் |
| புன்மை தெரிவா ரகத்து. |
|
பகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர் உள்ளம், இழிதகைப் பிறவிகளாகவே கருதும். |
330. | உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின் |
| செல்லாத்தீ வாழ்க்கை யவர். |
|
வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர். |