34. நிலையாமை |
331. | நில்லாத வற்றை நிலையின என்றுணரும் |
| புல்லறி வாண்மை கடை. |
|
நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும். |
332. | கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் |
| போக்கும் அதுவிளிந் தற்று. |
|
சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும். |
333. | அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் |
| அற்குப ஆங்கே செயல். |
|
நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும். |
334. | நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும் |
| வாள துணர்வார்ப் பெறின். |
|
வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள். |
335. | நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை |
| மேற்சென்று செய்யப் படும். |
|
வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும். |