பக்கம் எண் :

9

யாகவும்,  சார்பற்றும்,  நேரடியாகவும்,   பொதுவாகவும்,   எளிமையாகவும்
செய்தோர்   தேடிக்   கண்டுபிடிக்க  வேண்டியவர்களாகவே   இன்றுவரை
உள்ளனர்.
 

வள்ளுவர் ஈடற்ற முறை ஒன்றைப் பின்பற்றி அறம்  உரைத்தாராயினும்,
மக்கள் அறிவுநிலை வேறுபாட்டால் அதை  உணரும்  திறம்  அற்றவர்கள்
ஆயினர்    என்பதை   விட    ஆக்கப்பட்டனர்   என்றுரைப்பதே சரி.
அதனாற்றான் குறளுக்கு முதலில் தோன்றிய பத்து  உரைகளோடு   இன்று
வரை   எத்தனையோ   உரைகள்  வந்துள்ளன.  அவற்றுள்    இக்காலத்
தேவையைச் சரியாக ஈடு செய்யவல்லதாய் எழுந்ததே  கலைஞர்     உரை
என்னும் தெரியுரையாகும்.
 

2. வழிபாடு
 

கடவுள்   பற்றிய   எண்ணம்  மக்கள் தோன்றிய காலத்திலோ, அதன்
அண்மைக் காலத்திலோ ஏற்பட்டிருக்க முடியாது. மக்கள் அறிவு   வளர்ச்சி
ஏற்பட்டுச்    சிந்திக்கத்    தொடங்கியபோதுதான்    அந்த   எண்ணம்
அவர்களுக்குத்  தோன்றியிருக்க  முடியும்.  தான்  கண்ட  உலகத்தையும், 
அதில் காணப்பட்ட  பல்வகைப் பொருள்களையும் உண்டாக்கிய ஒருவன்
இருக்க வேண்டும் என்றும், அவைகளையெல்லாம் கட்டிக்காத்து ஒழுங்காக
நிருவாகம் செய்வதற்கு ஒருவன் இருப்பது நல்லது என்றும்  அப் பழங்கால
மாந்தன்  எண்ணத் தொடங்கியிருப்பான்.  அதன் விளைவுதான் கடவுளைப்
பற்றிய பல்வேறு வகைப்பட்ட கருத்துகளாக உருவெடுத்துப் பல்கிச் செழித்து
வளரத் தலைப்பட்டிருக்க  வேண்டும்.   அறிவின் தெளிவால், பகுத்தறிவின்
உதவியால் பிறகு  கடவுள்  பற்றிய  எண்ணம்  மெலியத்   தலைப்பட்டது.
மேலும் அதன் இருப்பு மெய்ப்பித்து  உறுதிப்படுத்தப்படாமையால்  கடவுள்
பற்றிய மாறுபாடான கருத்து வலுப்பெற்றுப் பெருகி