பக்கம் எண் :

துறவறவியல்74கலைஞர் உரை

366.

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை

வஞ்சிப்ப தோரும் அவா.

 

ஒருவரை   வஞ்சித்துக்    கெடுப்பதற்குக்    காரணமாக    இருப்பது
ஆசையேயாகும்.   எனவே,   ஆசைக்கு  அடிமையாகக்   கூடாது  என்ற
அச்சத்துடன் வாழ வேண்டும்.
 

367.

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை

தான்வேண்டு மாற்றான் வரும்.

 

கெடாமல் வாழ்வதற்குரிய நிலை, ஒருவன்  விரும்புமாறு  வாய்ப்பதற்கு,
அவன் பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும்.
 

368.

அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல்

தவாஅது மேன்மேல் வரும்.

 

ஆசை  இல்லாதவர்களுக்குத்  துன்பம்  இல்லை. ஆசை உண்டானால்,
அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்.
 

369.

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்

துன்பத்துள் துன்பங் கெடின்.

 

பெருந்துன்பம்   தரக்கூடிய   பேராசை  ஒழிந்தால்  வாழ்வில் இன்பம்
விடாமல் தொடரும்.
 

370.

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும்.

 

இயல்பாகவே  எழும்  அடங்காத  பேராசையை அகற்றி வாழும் நிலை,
நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும்.