376. | பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் |
| சொரியினும் போகா தம. |
|
தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா. |
377. | வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி |
| தொகுத்தார்க்குந் துய்த்த லரிது. |
|
வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப்பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும். |
378. | துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால |
| ஊட்டா கழியு மெனின். |
|
நுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதியினால், தம்மை வருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவறம் மேற்கொள்வர். |
379. | நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் |
| அல்லற் படுவ தெவன். |
|
நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். நன்மை கண்டு மகிழ்கிறவர்கள், தீமை விளையும்போது மட்டும் மனம் கலங்குவது ஏன்? |
380. | ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று |
| சூழினுந் தான்முந் துறும். |
|
இயற்கை நிலையை மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட முனைந்தாலும், இயற்கை நிலையே முதன்மையாக வந்து நிற்பதால் அதைவிட வலிமையானவையாக வேறு எவை இருக்கின்றன? |