39. இறைமாட்சி |
381. | படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும் |
| உடையான் அரசரு ளேறு. |
|
ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண் சிங்கம் போன்ற அரசாகும். |
382. | அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் |
| எஞ்சாமை வேந்தற் கியல்பு. |
|
துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும். |
383. | தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் |
| நீங்கா நிலனாள் பவற்கு. |
|
காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும். |
384. | அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா |
| மான முடைய தரசு. |
|
அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள். |
385. | இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த |
| வகுத்தலும் வல்ல தரசு. |
|
முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அராசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுகாத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும். |