பக்கம் எண் :

திருக்குறள்77பொருள்

39. இறைமாட்சி
 

381.

படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்

உடையான் அரசரு ளேறு.

 

ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா  வளம், குறையற்ற
அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத  அரண்  ஆகிய  ஆறு
சிறப்புகளும்   உடையதே  அரசுகளுக்கிடையே  ஆண்   சிங்கம் போன்ற
அரசாகும்.
 

382.

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்

எஞ்சாமை வேந்தற் கியல்பு.

 

துணிவு, இரக்க சிந்தை,  அறிவாற்றல்,  உயர்ந்த  குறிக்கோளை எட்டும்
முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும்.
 

383.

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்

நீங்கா நிலனாள் பவற்கு.

 

காலம்  தாழ்த்தாத  விரைவான   நடவடிக்கைகளும், அறிவுடைமையும்,
துணிவும்   நாடாளுகின்றவர்களுக்குத்   தேவையானவையும்,    நீங்காமல்
நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்.
 

384.

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா

மான முடைய தரசு.

 

அறநெறி   தவறாமலும், குற்றமேதும்   இழைக்காமலும்,  வீரத்துடனும்,
மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள்.
 

385.

இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த

வகுத்தலும் வல்ல தரசு.

 

முறையாக  நிதி ஆதாரங்களை வகுத்து, அராசாங்கக் கருவூலத்திற்கான
வருவாயைப்    பெருக்கி,  அதைப்      பாதுகாத்துத்      திட்டமிட்டுச்
செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.