பக்கம் எண் :

11

யாயினும்; நூன்முறைமைபற்றி நாற்பொருளாய்க் கூறி விளக்கினார்; மேல்வருமிடங்களிலும் இங்ஙனங் கொள்க.

(4)

 5. மண்ணி யறிப மணிநலம் பண்ணமைத்து
எறிய பின்னறிப மாநலம் மாசறச்
சுட்டறிப பொன்னின் நலங்காண்பார் கெட்டறிப
கேளிரான் ஆய பயன்.

(இ-ள்.)மணி நலம் - மாணிக்கம் முதலான மணிகளின் நல்லியல்பை, மண்ணி அறிப - கழுவியறிவார்கள்; மா நலம் - குதிரையின் நல்லியல்பை, பண் அமைத்து - அதன்மேற் சேணமமைத்து, ஏறிய பின் அறிப - ஏறிய பின் அறிவார்கள்; பொன்னின் நலம் காண்பார் - பொன்னின் மாற்றை யறிவார், மாசு அற - குற்றங்கெட, சுட்டு அறிப - அதனை உருக்கியறிவார்கள்; கேளிரான் ஆய பயன் - உறவினரால் உண்டாகும் பயனை, கெட்டு அறிப - செல்வமெல்லாங் கெடஅறிவார்கள்.

(க-து.) மக்கள் செல்வம் கெட்டு வறுமையுறும்போது தான்அவர் உறவினரால் அவர்க்கு உண்டாகும் பயன் நன் கறியப்படும்.

(வி-ரை.) மண்ணல் - கழுவல். பண் - சேணத்தையுணர்த்துதல், ‘பண்ணென்ப பரிமாவின் கலணையும் பேர்' (11 : ணக, 11)என்னுஞ் சூடாமணி நிகண்டினாற் காண்க.பொன்னின்நலமென்பது, வெள்ளி முதலியன:கலவாமை. காண்பார் இதனை மற்றவற்றிற்குக் கூட்டியுரைத்தலுமாம்.கேளிர் - ‘கேண்மை' யென்னும் பண்படியாகப் பிறந்த பல்லோர் படர்க்கைப் பெயர்.செல்வ மிக்கா னொருவன் தான் வறுமையுற்ற காலத்துக் கேளிரின் நன்றியறிவை நன்கறிவானாதலின் ‘கெட்டறிப.....பயன்' என்றார்.

(5)

 6. கள்ளி வயிற்றின் அகில்பிறக்கும் மான்வயிற்றின்
ஒள்ளரி தாரம் பிறக்கும் பெருங்கடலுள்
பல்விலைய முத்தம் பிறக்கும் அறிவார்யார்
நல்லாள் பிறக்குங் குடி.

(இ-ள்.)அகில் - அகிற்கட்டை, கள்ளி வயிற்றின் பிறக்கும் - கள்ளிமரத்தின் நடுவில் உண்டாகும்; ஒள்அரிதாரம்