28. ...... ....... ...... ....... ...... பெய்த புறவிற் கடுமான்றே ரொல்லைக் கடாவா ரிவர்காணின் காதலர் சில் ........ ....... ...... (சொ-ள்.) பெய்த புறவில் - மழை பெய்த முல்லை நிலத்தில்; கடு மான் தேர் - வேகமாகிய பரிகள் பூட்டப்பட்ட தேரினை; ஒல்லை கடாவார் - விரைவிற் செலுத்துவார்; நின்காதலர் இவர் காண் - உனது காதலர் இவரே அறிவாயாக. 29. ....... ....... ...... குருந்தலரப் பீடா ரிரலை பிணைதழுவக் - காடாரக் கார்வானம் வந்து முழங் ... ... ... ....... ....... ...... (சொ-ள்.) குருந்து அலர - குருந்த மலங்களின் மலர்கள் மலர; பீடு ஆர் இரலை பிணைதழுவ - பெருமை பெற்ற ஆண்மான்கள் பெண்மான்களைக் கூடியின்பமுற; காடு ஆர கார் வானம் வந்து முழங் - காடுகள் நீர் நிறைந்து செழிக்கும்படி கரிய மேகங்கள் வந்து இடித்து மழை பொழிய. 30. ....... ....... ...... ....... ...... ...... ....... ....... கொன்றை கொடுகுழ லூதிய கோவலர் மன்றம் புகுதரும் போழ்து. (சொ-ள்.) கொன்றை கொடு குழல் ஊதிய கோவலர் - கொன்றைக் காயைத் துளைத்துக் குழலாகப்பண்ணி வாய்வைத்து ஊதி வருகின்ற ஆயர்கள்; மன்றம் புகுதரும்போழ்து - தம்பசுக்கள் நிற்கும் மன்றத்திற் புகுகின்ற காலமாகிய மாலையில். 31. ....... ....... ...... ....... ....... ...... ....... ....... ........ ....... ....... வானம் வந்து துளிவழங்கக் கண்டு.
|