பக்கம் எண் :

8

தலும், ஆள் அல்லான் - ஆளமாட்டாதவன், செல்வம்குடியுள் - செல்வமுள்ள குடியில், பிறத்தலும் - பிறந்து அதனை ஆளக் கருதுதலும், பல் அவை உள் - கற்றார் பலர் கூடிய சபையில், அஞ்சுவான் - அஞ்சும் இயல்புடையவன், கற்ற - படித்துள்ள, அருநூலும் - அருமையான நூலுணர்ச்சியும், இ மூன்றும் - ஆகிய இம் மூன்று செயல்களும், துஞ்சு - தூங்குகின்ற, ஊமன் - ஊமையானவன், கண்ட கனா - கண்ட கனாவைப் போலாம் ; (எ-று.)

(க-ரை.) எங்ஙனம் வாய்பேசாத ஊமையன் தான் கண்ட கனவைப் பிறருக்கு எடுத்துரைத்துப் பயன்படுத்த கூடாதவனாவனோ? அதுபோல உள்ளான் வாளைமீனைத் தாக்குதலும், திறமையில்லாதவன் செல்வக் குடியிற்பிறந்து அதனைக் காப்பாற்றுதலும், சபைக்கு அஞ்சுகின்றவன் படித்த படிப்பும் இம் மூன்றும் பயன்படாதவை.

வாளை மீன் : இரு பெயரொட்டுப் பண்புத் தொகை. மீன் உள்ளல் : இரண்டாம் வேற்றுமைத் தொகைநிலைத் தொடர்; மீனுக்கு என நான்காம் வேற்றுமைத் தொகையாகவும் கொள்ளலாம். வாளைமீன் உள்ளல் தலைப்படல் என்பது ஒருவன் தனக்கு முடித்தற்கரிய போரைச் செய்து வெற்றிபெற முயலுதல் என்னும் பொருளைக் குறிக்கிறதால் பிறிது மொழிதல் என்னும் அணி, ஆள் : ஆள்தல் என்பதில் தல் விகுதி கெட்டுவந்த முதனிலைத் தொழிற்பெயர். பிறத்தல் : ஆகுபெயர். பல்லவை - பல்+அவை : பண்புத்தொகை. நூல் - நூலுணர்ச்சிக்கு : ஆகுபெயர். கனா - கனவு, இதற்கெதிர்மொழி நனா. நனா - நினைவு. கனாத் தகைமையைத் தலைப்படல் முதலிய மூன்றில் ஆரோபித்துக் கூறுதல் உருவக அணி.

(7)

 8. தொல்லவையுள் தோன்றுங் குடிமையும் தொக்கிருந்த
நல்லவையுள் மேம்பட்ட கல்வியும் - வெல்சமத்து
வேந்துவப்ப வாட்டார்த்த வென்றியும் இம்மூன்றும்
தாந்தம்மைக் கூறாப் பொருள்.

(இ-ள்.) தொல் அவையுள் - பழைமையை ஆராயவல்லோர் கூடியிருக்கும் சபையிடத்தே, தோன்றும் - தானாக விளங்கித் தோன்றும், குடிமையும் - குடிப்பிறப்பும், தொக்கு இருந்த - பலவகை நூலோரும் கூடியிருந்த, நல் அவையுள் - நல்ல சபையினிடத்தே, மேம்பட்ட - மேன்மைப்பட்ட, கல்வியும் - படிப்பும், வெல் சமத்து -