பக்கம் எண் :

12
இன்றியமையாது நீராடுதல்

தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை
உண்டது கான்றல் மயிர்களைதல் ஊண்பொழுது
வைகு துயிலோ டிணைவிழைச்சுக் கீழ்மக்கள்
மெய்யுறல் ஏனை மயலுறல் ஈரைந்தும்
ஐயுறா தாடுக நீர்.

(இ-ள்.) தேவர் வழிபாடு - தன்னால் வழிபடப்பெறுந்தெய்வத்தைத் துதித்தற்கண்ணும், தீக்கனா - தீயகனவைக் கண்டவிடத்தும், வாலாமை - தூய்மை குன்றியகாலத்தும், உண்டது கான்றல் - உண்டதை வாந்திசெய்தவிடத்தும், மயிர்களைதல் - மயிர் களைந்த விடத்தும்,ஊண் பொழுது - உண்ணும் பொழுதும், வைகு துயிலோடு -பொழுதேறத் தூங்கிய விடத்தும், இணைவிழைச்சு -புணர்ச்சியான காலத்தும், கீழ் மக்கள் மெய்யுறல்- கீழ் மக்கள் உடம்பு தீண்டியவிடத்தும், ஏனை மயல்உறல் - மலசலங் கழித்தகாலத்தும், ஈரைந்தும் - எனஇப்பத்திடத்தும், ஐயுறாது - சந்தேகங் கொள்ளாமலே,நீர் ஆடுக - நீராடல் செய்க.

(ப. பொ-ரை.) தன்னால் வணங்கப்படுந் தேவரை வழிபடுதற்கண்ணும், தீக்கனாக் கண்டவிடத்தும், தூய்மையின்மையுண்டானவிடத்தும், உண்டதனைக் கான்றவிடத்தும்,மயிர்களைந்தவிடத்தும், உண்ணும்பொழுதும், பொழுதேறஉறங்கிய விடத்தும், இணைவிழைச்சு உண்டாயின விடத்தும்,கீழ்மக்கள் உடம்பு தீண்டியவிடத்தும், மூத்திரபுரீடங்கள் கான்றவிடத்தும் என இப்பத்திடத்தும்ஐயுறாதே நீராடுக.

(க-ரை.) கடவுள் வழிபாடு முதலியபத்துச் சமயங்களிலும் இன்றியமையாது நீராடல் வேண்டும்.

வாலாமை - தூய்மையின்மை. வால் - தூய்மை. வைகு - தங்கு.வைகு துயில் - படுக்கையில் நெடும் பொழுது தங்கியதுயில். கான்ற இடத்தும் - கழித்த போதும். மூத்திரபுரீடங்கள்- சலமலங்கள். ஆடுக : வியங்கோள், விதித்தற்பொருள்.தீக்கனா - தீமை அல்லது துன்பத்தைத் தருங் கனவு.கான்றல் : தொழிற்பெயர், கால் : பகுதி.

(10)

ஆடையணிதல்

உடுத்தலால் நீராடார் ஒன்றுடுத் துண்ணார்
உடுத்தாடை நீருட் பிழியார் விழுத்தக்கார்