பக்கம் எண் :

112

நினைத்த அப்பொழுதிலேயே கடியன கூறிமுடித்துக்கொள்ளுதல், கன்று விட்டு ஆ கறக்கும் போழ்தில் - கன்றினைச் செலுத்தி ஆவினைக் கறக்க இருக்கும்போது, கறவானாய் - அங்ஙனங் கறவாதவனாகி, அம்புவிட்டு ஆ கறக்குமாறு - அம்பினைச் செலுத்திஆவினைக் கறக்க நினைக்குமாற்றை ஒக்கும்.

(க-து.) தமது செயலைச் செய்வோரிடத்தில் அன்பாகவும் விரைவின்றியு மிருந்து செயலை முடித்துக்கொள்க.

(வி-ம்.) ஆவினை விரைவு காரணமாகத் துன்புறுத்துவான் பாலினைப் பெறாததுபோல விரைவாகவும் அன்பின்றியும் இருப்பான் பிறரிடமிருந்து காரியத்தைக் கொள்ள முடியாது.அங்ஙனம் கொண்டாலும்அதனாற் பயன்பெறுதல் இல்லை.

'கன்றுவிட் டாக்கறக்கும் போழ்தில் கறவானாய், அம்புவிட்டாக்கறக்குமாறு' என்பது பழமொழி.

(5)

167. மடியை வியங்கொள்ளின் மற்றைக் கருமம்
முடியாத வாறே முயலும் - கொடியன்னாய்!
பாரித் தவனை நலிந்து தொழில்கோடல்
மூரி உழுது விடல்.

(சொ-ள்.) கொடி அன்னாய் - கொடிபோன்ற இடையை உடையாய்!, மடியை வியம் கொள்ளின் - சோம்பலுடையானை ஒருசெயலைச் செய்ய ஏவின், மற்றை கருமம் முடியாத ஆறே முயலும் - அவனைச் செய்ய ஏவிய அச்செயல் முடியாத விதமாக முயற்சி செய்வான் சோம்பலுடையான், பாரித்தவனை நலிந்து தொழில்கோடல் - சோம்பலாற் பெருத்தவனைத் துன்புறுத்திக் காரியத்தைக் கொள்ளுதல், மூரி உழுதுவிடல் - கிழ எருதினைக் கொண்டுநிலத்தை உழுது பயன்கோடல் ஒக்கும்.

(க-து.) சோம்பலுடையானைக் கொண்டு ஒரு காரியம் செய்வித்தலாகாது;நலிந்து செய்விப்பினும் அதனால் பயன் உண்டாகாது.

(வி-ம்.) 'முடியாதவாறே முயலும்' என்றது அச் செயலுக்கு மாறுபட்டு வேறொன்றைச் செய்வானல்லன்.அங்ஙனஞ் செய்யினும் ஒருவகையில் முயற்சி உடையான் என்றே கூறலாம்.அங்ஙனஞ் செய்யாது தன்னால் அத்தொழில் முடியாதவாறு மேலும் மேலும் சோம்பலைத் தேடிக்கொள்ளுதலில் முயற்சி செய்வான் என்பதைக் கருதி, கிழவெருதினைக் கொண்டு உழுவான் தக்க காலத்தில் உழமுடியாமையால் விளையுளை இழத்தல்போல,