பக்கம் எண் :

127

188. மனங்கொண்டக் கண்ணும் மருவிலசெய்யார்
கனங்கொண் டுரைத்தவை காக்கவே வேண்டும்
சனங்கள் உவப்பன செய்யாவும் செய்க
இனங்கழு வேற்றினார் இல்.

(சொ-ள்.) மனம் கொண்டக் கண்ணும் - (ஒரு காரியத்தைச் செய்ய) மனம் விரும்பிய இடத்தும், மருவில செய்யார் - அது வழக்கத்தில் வராவாயின் அதனைச் செய்யார் அறிவுடையோர், உரைத்தவை - நூல்கள் ஆகாவென் றுரைத்தனவற்றை, கனங்கொண்டு காக்கவே வேண்டும் - உறுதிகொண்டு அவற்றைக் காத்தல் வேண்டும். செய்யாவும் - நூல்கள் ஆகாவென உரைத்தனவும், சனங்கள் உவப்பன - மக்களால் விரும்பப்படுவனவாயின், செய்க - அவற்றைச் செய்தல் வேண்டும். இனங் கழுவு ஏற்றினார் இல் -நூல்களோடு மாறுபட்டுக் கூறுகின்றனர் என்று மக்களைக்கழுவின்கண் ஏற்றினார் உல்கத்தில் இல்லை ஆதலான்.

(க-து.) உலகநடையினை யறிந்துஅதற்கொப்ப ஒழுகுக.

(வி-ம்.) தன்னுடைய கருத்திற்கும் இடங்கொடுப்பதில்லை; நூல்களுடைய கருத்திற்கும் இடங்கொடுப்பதில்லை. இங்ஙனம் உலகியல் நடந்து வருவதால் சினந்து கூறுவார் போன்று 'இனங்கழுவேற்றினார் இல்' என்றார். ஆகவே, உலகநடை வேதநடைபோல அறநூல்களுட் கூறப்படுவதன்றித் தாமே அறிந்து செய்யும் தன்மையை உடையது என்பதாயிற்று. 'செய்யாவும் செய்க'என்றதனால் நூலொடு மாறுபட்டனவும் உலகியலின்கண்பயின்றுவரும் என்பது பெறப்படும்.

'இனங்கழு வேற்றினார் இல்' என்பது பழமொழி.

(6)

189. கடுப்பத்தலைக்கீறிக் காலும் இழந்து
நடைத்தாரா என்பதூஉம் பட்டு - முடத்தோடு
பேர்பிறி தாகப் பெறுதலால் போகாரே
நீர்குறி தாகப் புகல்.

(சொ.ள்.) நீர் குறிதாக - நீர் சுருங்கி இறங்கிப் போகலாம் படி அளவுபட்டிருக்க, புகல் - அந்நெறியில் இறங்கிப் போதலை ஒழித்து, தலை கடுப்ப கீறி - தலை மிகவும் கிழிபட்டு, காலும் இழந்து - கால்களும் வலி இழந்து, நடைத்தாரா என்பதும் பட்டு - நடத்தலைச் செய்யா வென்றும் சொல்லப்பட்டு, முடத்தோடு பேர்பிறிதாகப் பெறுதலால் -