பக்கம் எண் :

15

ஒருவர்பின் ஒருவராகக் கூறினாலன்றி அவர்கள் கொண்ட கருத்தை நிலைபெறச்செய்ய முடியாது.

'சிறிதேனும் இன்னாது இருவர் உடன் ஆடல் நாய்' - இஃது இச் செய்யுளில் வந்த பழமொழி.

(2)

19. துன்னி இருவர் தொடங்கிய மாற்றத்தில்
பின்னை உரைக்கப் படற்பாலான் - முன்னி
மொழிந்தால் மொழியறியான் கூறல் முழந்தாள்
கிழிந்தானை மூக்குப் பொதிவு.

(சொ-ள்.) இருவர் துன்னி தொடங்கியமாற்றத்தில் - வினவுவானும் விடை கொடுப்பானுமாகிய இருவரும் கூடிச் சொல்லத் தொடங்கிய வார்த்தையின்கண், பின்னை உரைக்கப்படற் பாலான் - பின்னாக விடைகூறத் தக்கவன், முன்னி மொழிந்தால் - வினாவறியாது முற்பட்டு ஒன்றனைக் கூறினால், மொழியறியான் - விடை கூறுதலறியாதவனாய் முடியும், கூறல் - வினாவிற்கு முன்னர் விடைகூறுதல், முழந்தாள் கிழிந்தானை மூக்குப் பொதிவு - முந்தாள் கிழிந்துபுண்பட்டவனை அஃது அறியாது மூக்கை இழைகொண்டு கட்டுவதோடுஒக்கும்.

(க-து.) வினாவறிந்து விடை கூறுதல் வேண்டும்.

(வி-ம்.) முழந்தாள் கிழிந்தமை அறியாது மூக்கை இழைகொண்டு மூடியதுபோன்று வினாவின் தன்மையறியாது விடை கூறுதல் ஆகும். 'முழந்தாள் கிழிந்தானை மூக்குப் பொதிவு' - இஃது இச் செய்யுளிற் கண்ட பழமொழி.

(3)

20. கல்லாதும் கேளாதும் கற்றார் அவைநடுவண்
சொல்ஆடு வாரையும் அஞ்சற்பாற்று - எல்அருவி
பாய்வரை நாட! பரிசுஅழிந் தாரோடு
தேவரும் ஆற்றல் இலர்.

(சொ-ள்.) எல் அருவி பாய்வரை நாட - விளங்கிய அருவிகள் பாயும் மலை நாடனே!, பரிசு அழிந்தாரோடு - பண்பு இல்லாதவர்களோடு, தேவரும் ஆற்றல் இலர் - தேவர்களும் ஒருசொல் கூறுதற்குக்கூட வலிமை யில்லாதவர்களாய் முடிவர். ஆகையால் கல்லாதும் கேளாதும் கற்றார் அவை நடுவண் சொல் ஆடுவாரையும் - நூல்களைக் கல்லாதும், கற்றாரிடம் கேளாதும் அறிஞர்களது அவையிடைச் சிலசொல் சொல்லுத லுடையாரையும், அஞ்சற்