பக்கம் எண் :

151

எனச் சிறப்பித்தோதப் பெறும் பசி நீக்குதலைச் செய்யார் என்பார் களையார் என்றும் 'ஏதிலார் ஆர' என்றலின் 'வம்பலர்க்குதவல்'என்றுங் கூறினார்.

'ஆற்றக் கரும்பனை யன்ன துடைத்து' என்பது பழமொழி.

(8)

221. வழங்கார் வலியிலார் வாய்ச்சொல்லும் பொல்லார்
உழந்தொருவர்க் குற்றால் உதவலு மில்லார்
இழந்ததில் செல்வம் பெறுதலும் இன்னார்
பழஞ்செய்போர் பின்று விடல்.

(சொ-ள்.) வழங்கார் - (உணவிற்கு ஒன்று மின்மையால் பசியால் வருந்தி இரந்தார்க்கு) அவர்க்கு வேண்டிய உணவினைக் கொடாராய், வலியிலார் வாய்ச்சொல்லும் பொல்லார் - கொடுக்கும் ஆற்றல் இலராதலின் சொல்லும் சொற்களாலும் தீயவர்களாய், உழந்து - வருந்தியாகிலும், ஒருவர்க்கு உற்றால் உதவலும் இல்லார் - ஒருவர்க்கு ஓரிடர் வந்துற்ற ஞான்றை உதவிசெய்து அதனை நீக்குதலும் செய்யாதவராகிய, இன்னார் - இத்தன்மையர். இறந்தது இல் செல்வம் பெறுதலும் - கெடுதலில்லாத செல்வத்தைப் பெற்றிருத்தலும், பழஞ்செய் - நெடுநாட்களாக எரு முதலிய உரம் பெற்றுவந்த வயல், இன்று - உரம் பெறாத இப்பொழுது, போர்பு விடல் - போர் இடுமாறு கதிர்கள் விடுதலை யொக்கும்.

(க-து.) ஈதல், இனிய, கூறுதல், உதவி செய்தல் முதலியன இல்லாதவர்கள் செல்வம் பெற்றிருத்தல், முன்செய்த நல்வினையாலே யாம்.

(வி-ம்.) கொடுக்கும் ஆற்றல் இல்லாதவர்களாதலின் அதற்கேற்றவாறு சொற்களும் கடியவாயின. இரந்தார்க்கு வழங்கலும், இனிய கூறுதலும், உற்றுழி யொன் றுதவலும் ஒருவன் செல்வம் பெறுதற் குரியகாரணங்களாம்.

'துன்புறூஉம் துவ்வாமை யில்லாகும் யார்மட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு'

யாவர் மாட்டும் இனிய கூறுவார்க்குப் பகையும் நொதுமலும் இலவாய் யாவரும் நண்பேயாவர், நண்பராகவே எல்லாச் செல்வமும் எய்துவர். இனிய கூறுதலாலும் செல்வம் பெறுவர் என்பது இதனாலறியப்படும். 'இழந்ததில் செல்வம்' என்றார், தன்னையுடையார் பலரும் இறக்கத் தான் எஞ்ஞான்றும் இறவாது நிலைத்து நிற்றலின். 'போர் இடுபு' என்பது 'போர்பு'எனத்தொக்கது செய்பு என்னும்