ஒழுகின் - யாவரிடத்தும் பொருந்திய அன்புடைய மனத்தனாகி ஒழுகின், செறும் மனத்தார் - வெல்லும் மனதுடைய அரசர்கள், பாயிரம் கூறி படை தொக்கால் - வேண்டிய அளவு முகவுரை கூறிப் படையைத் திரட்டினால், என் செய்ப - அப்படைகள் என்ன செய்யும்?, ஆயிரம் காக்கைக்கு ஓர் கல் - ஆயிரம் காக்கைகளை ஓட்டுவதற்கு இட்ட ஒரு கல்லைப்போல அவர் தோன்றியதுணையானே பறந்து செல்வர். (க-து.) அரசர்கள் அன்பு ஒன்றே கொண்டுமறத்தை வெல்லலாம். (வி-ம்.) அல்லாத வேந்தன், நலத்த வேந்தன் எனத் தனித்தனிகூட்டுக. துணை இருவகைப்படும் அல்லாத என்றமையால் அறிவுடைமை, நீதி நூல்வழி ஒழுகல் முதலிய வுடைய மனத்தான் என்பது பெறப்படும். இஃது ஒற்றுமைத் துணை. மா நலம் என்றமையான் படை, பொருள் முதலிய வேற்றுமைத்துணை உடையான் என்பது பெறப்படும். 'செறும் மனத்தார்' என்றது, அன்புடையனாதலின் யாவரும் பகைமையின்றி ஒழுகுதலை அறிந்து அழுக்காறுற்று வெல்ல நினைக்கும் அரசர் என்றவாறு. பாயிரம் என்றது, துணைசெய்வோர்க்குத் தாம் பின்னர்ச் செய்வதாக உறுதி கூறும் உரையை. 'தொக்கால்' என்றமையின் அவர் அன்புடைமை அறிந்த துணை செய்வோர் தொகார் என்பதாம். என் செய்ப என்றது முற்சேறலையா? பிற் சேறலையா என்று வினாவியவாறாம். அப்படைகள் சேர்தல் இல்லை. ஒருகால் சேர்ந்தாலும் அவரைக் கண்டு நாணி பிற்சேரும் என்பதாம். செய்ப என்பது அகரவீற்று,அஃறிணைப் பன்மை வினைமுற்று. 'அறத்திற்கே அன்புசார்பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை'என்பதே இது. 'ஆயிரம் காக்கைக்கு ஓர் கல்' என்பது பழமொழி. (9) 250. அங்கோல் அவிர்தொடி!ஆழியான் ஆயினும் செங்கோலன் அல்லாக்கால் சேர்ந்தாரும் எள்ளுவரால் செங்கோன்மை வேந்தர்கள் வேண்டும் சிறிதெனினும் தண்கோல் எடுக்குமாம் மெய். (சொ-ள்.) அம் கோல் அவிர் தொடி - அழகிய கோல் போன்று திரண்டு விளங்குகின்ற தொடியை உடையாய்!, வேந்தர் கண் - அரசன் பகையரசர்மாட்டு, வெம் கோன்மை சிறிது வேண்டும் எனினும் - கொடுங்கோன்மையைச் சிறிது விரும்பினானாயினும், செங்கோலன் அல்லாக்கால் - தன்னிழற்கீழ் வாழ்வாரிடத்துச் செங்கோன்மை உடையவன் அல்லாதவிடத்து,
|