அவர் வெகுடற் கேற்பனவற்றை இயற்றி, பொய் மேலே கொண்டு அ இறைவன் கொன்றார் - வஞ்சனையை ஏறிட்டுக்கொண்டு அந்த அரசனைக் கொன்றவர்கள், பனை தம்மேலே வீழ குறைப்பர் - பனை தம்மேலே வீழும்படி வெட்டுகின்றவர் களோடொப்பர். (க-து.) அரசனைக் கொன்றவர்கள்இறுதி எய்துவர். (வி-ம்.) 'கைம் மேலே நின்று' என்றார், முன்னர் மெய்ம்மையின்கண் நின்றார் இதுபொழுது தம் வசமும் நில்லாது காரியத்தின்மேல் நிற்கின்றார் என்ப துணர்த்தற்கு. அரசனுக்குத் தீமை யியற்றுவது, தமக்குத் தீமையைத் தாமே தேடிக்கொள்வதை யொக்கும். 'குறைப்பர் தன்மேலே வீழப் பனை' என்பது பழமொழி. (15) 281. வெஞ்சின மன்னவன் வேண்டாத வேசெயினும் நெஞ்சத்துட் கொள்வ சிறிதும் செயல்வேண்டா என்செய் தகப்பட்டக் கண்ணும் எழுப்புபவோ துஞ்சு புலியைத் துயில். (சொ-ள்.) என் செய்து - எல்லாத் துன்பங்களையும் தமக்குச் செய்து, அகப்பட்டக்கண்ணும் - தம்மிடத்து அகப்பட்டவிடத்தும், துஞ்சு புலியை துயில் எழுப்புபவோ - உறங்குகின்ற புலியை அவ்வுறக்கத்தினின்றும் எழுப்புவார்களோ? (இல்லை). (அதுபோல), வெஞ்சின மன்னவன் - கொடிய சினத்தையுடைய அரசன், வேண்டாதவே செயினும் - தங்கீழ் வாழ்வார்க்குத் தீமையே செய்யினும், நெஞ்சத்துள் கொள்வ - அவன் மனத்தில் கறுவுகொள்ளத்தக்கனவற்றை, சிறிதும் செயல் வேண்டா - அவன்கீழ் வாழ்வார் ஒருசிறிதும்இயற்றுதல் வேண்டா. (க-து.) அரசன் தமக்குத் தீமை செய்யினும் அவற்குத் தீமைசெய்யாதொழிக. (வி-ம்.) புலி அகப்பட்டுவிட்டதே என்பது கருதி துயில் எழுப்புவார் இலராதல்போல, அரசன் தீமை செய்தானேயென்பது கருதிச் சிறிதும் தீமை செய்தல் இலராதல் வேண்டும். புலி உறக்கத்தினின்றும் நீங்கி நிற்றல் அச்சத்திற்குக் காரணமாதல்போல், அரசன் மனத்துச் சிறிது கறுவு கொள்வதும் அது செய்தார் அழிவுக்குக் காரணமாம். 'அகப்படாக்கண்ணும்'என்பதும் பாடம். 'எழுப்புபவோ துஞ்சு புலியைத் துயில்' என்பது பழமொழி. (16)
|