பக்கம் எண் :

21

கல்லார் பலர்கூடிக் காதலித்து வாழ்கினும்நூல்
வல்லான் ஒருவனையே மானுவரோ? - அல்லாரும்
எண்ணிலா வான்மீன் இலகிடினும் வானகத்தோர்
வெண்ணிலா ஆமோ விளம்பு.

என்னும் நீதிவெண்பாவும் இக்கருத்தை நன்கு விளக்கும்.

(2)

28. நற்(கு)அறி(வு) இல்லாரை நாட்டவும் மாட்டாதே
சொற்குறி கொண்டு துடிபண் உறுத்துவபோல்
வெற்(பு)அறைமேல் தாழும் இலங்குஅருவி நன்னாட!
கற்றறிவு போகா கடை.

(சொ-ள்.) வெற்பு அறை மேல் தாழும் இலங்கு அருவி நன்னாட - மலையினின்றும் பாறையின்மேல் விழும் விளங்குகின்ற அருவி பாயும் நல்ல நாட்டை உடையவனே!, சொல்குறி - சொல்லால் குறிக்கப்படும் பொருளை, துடிகொண்டு - உடுக்கையைக் கொண்டு (அதன் கண்), பண் உறுத்துவபோல் - பண் உண்டாக்குவதைப்போல, நன்கு அறிவு இல்லாரை - மிகவும் இயற்கையறிவு இல்லாரை, நாட்டவும் மாட்டாது - கல்வி யறிவைப் போதித்ததனால் சிறந்தவனாக நிலைநாட்ட முடியாது. (ஆகையால்), கற்றறிவு கடைபோகா - நூல்களைக் கற்றலால் ஆகிய அறிவு முற்றிலுஞ்செல்லாது.

(க-து.) கல்வியறிவோடு இயற்கை யறிவும் உடையான் சிறந்து விளங்குவான்.

(வி-ம்.) துடி தட்டினாலன்றி ஓசை உண்டாகாதவாறு போல, இயற்கை யறிவில்லான் அறிவுறுத்தபோதன்றி மற்றைய நேரங்களில் அறியான். நன்கறிவு என்பது நற்கறிவு என வலித்தல் விகாரம் பெற்றது. 'கற்றறிவு கடைபோகா' - இஃது இச்செய்யுளிற் கண்ட பழமொழி.

(3)

29. ஆணம் உடைய அறிவினார் தம்நலம்
மானும் அறிவி னவரைத் தலைப்படுத்தல்
மான்அமர் கண்ணாய்! மறம்கெழு மாமன்னர்
யானையால் யானையாத் தற்று.

(சொ-ள்.) மான் அமர் கண்ணாய் - மான் விரும்பும் கண்ணை உடையாய், ஆணம் உடைய அறிவினார் - மனத்திட்பம் உடைய அறிஞர்கள், தம் நலம் மானும் அறிவினவரை தலைப்படுத்தல் -