பக்கம் எண் :

24

(வி-ம்.) பாசியை உவமை கூறலின் மிக்க படிற்றுரைகளை இடைவிடாது உரைப்பர் என்பதுபெறப்பட்டது. அவர்மேல் பழித்தற்குரியன இல்லை யென்பார் இட்டுக் கூறினார் என்றார். 'ஞாயிற்றைக் கைம்மறைப்பார் இல்லை' - இஃது இச்செய்யுளில், வந்த பழமொழி.

(7)

33. அருவிலை மாண்கலனும் ஆன்ற பொருளும்
திருவுடையார் ஆயின் திரிந்தும் - வருமால்
பெருவரை நாட! பிரிவின்(று) அதனால்
திருவினும் திட்பம் பெறும்.

(சொ-ள்.) பெருவரை நாட - பெரிய மலைநாட்டை உடையவனே!, திரு உடையர் ஆயின் - செல்வம் உடையவர்களுக்கு ஆயின், அருவிலை மாண்கலனும் ஆன்ற பொருளும் திரிந்தும் வரும் - (அவர்தம்) அரிய விலையுடைய மாட்சிமைப்பட்ட பூண்களும், நிறைந்த செல்வமும் நிலைபெறாது மாறி வரும் இயல்பை உடையன, பிரிவின்று - (அறிவுச் செல்வம் உடையோர்க்கு ஆயின் அவர் தம் செல்வம்) பிரிதலில்லை, அதனால் - அத்தன்மையால், திருவினும் திட்பம் பெறும் -செல்வத்தினும் அறிவே உயர்வைப் பெறும்.

(க-து.) அறிவுச்செல்வம் பொருட்செல்வம்போல் பிரிதலில்லாமையால் அதனையேதேடுதல் வேண்டும்.

(வி-ம்.) 'திரிந்தும் வருமால்' எனவே அறிவுச்செல்வம் திரியாது என்பதும், அறிவுச் செல்வத்தை நாம் தேடுதல் வேண்டும் என்பதும் பெறப்படும். 'திருவினும் திட்பம் பெறும்' என்பது இச்செய்யுளில் வந்த பழமொழி.

(8)

5. ஒழுக்கம்

34. விழுத்தொடையர் ஆகி விளங்கித்தொல் வந்தார்
ஒழுங்(கு) உடையர் ஆகி ஒழுகல் - பழத்தெங்கு
செய்த்தலை வீழும் புனலூர! அஃதன்றோ
நெய்த்தலைப்பால் உக்கு விடல்.

(சொ-ள்.) பழத்தெங்கு செய் தலை வீழும் புனல்ஊர - தெங்கம்பழம் வயலின்கண் விழுகின்ற நீர் நிறைந்த மருதநிலத்தலைவனே!, விழுத்தொடையர் ஆகி விளங்கி தொல் வந்தார் - சிறந்த தொடர்ச்சியை உடையாரை உடையது ஆகிப் புகழால்