பக்கம் எண் :

272

(வி-ம்.) நான்கும் இம்மைக்கல்லது பயன்படாமையின், இருமைக்கும் பயன்படுவதாய கடவுளை உடைமையாகக் கொள்ளுதலே சிறந்த தெனப்பட்டது. 'இன்னரெனல்' : உம்மை விகாரத்தாற் றொக்கது.இம்மை, உம்மை என்பன சுட்டுச் சொல்லடியாகப் பிறந்த பெயர்கள்.உம்மைபின்னர் வருவதாகிய மறுமையை உணர்த்தி நின்றது.

'தம்மை யுடைமை தலை'என்பது பழமொழி.

(1)

388. அடங்கி அகப்படஐந்தினைக் காத்துத்
தொடங்கிய மூன்றினால் மாண்டீண் - டுடம்பொழியச்
செல்லும்வாய்க் கேமம் சிறுகாலைச் செய்யாரே
கொல்லிமேல் கொட்டுவைத் தார்.

(சொ-ள்.)அடங்கி - துறவறத்திற்கு விதிக்கப்பட்ட நெறியின்கண் தாம் அடங்கி ஒழுகி, ஐந்தினை அகப்பட காத்து -ஐம் புலன்களையும் பொறிகள் மேற் சொல்லாதவாறு செறியப் பாதுகாவல் செய்து, தொடங்கிய - தாம் செய்யத் தொடங்கிய துறவற நெறியில், மூன்றினால் மாண்டு - மனம், மொழி, மெய் என்ற மூன்றானுந் தூயராய் மாட்சிமைப்பட்டு, ஈண்டு உடம்பு ஒழிய - இவ்வுலகத்தின்கண் இவ்வுடம்பு ஒழிந்து நிற்க, செல்லும் வாய்க்கு ஏமம் சிறு காலை செய்யாரே - இனிச் செல்ல விருக்கும் மறுமைக்கு உறுதியைக் காலம்பெறச் செய்யாதவர்களே, கொல்லிமேல் கொட்டு வைத்தார் - தீயின் மீது நெல்லினைப் பெய்து பொரித்து உண்ணுபவரோ டொப்பர்.

(க-து.)காலம் பெறத் துறந்து வீடு எய்துக என்றது இது.

(வி-ம்.)'அகப்படக் காத்து' என்றது பயிற்சி வயத்தான் எதிர்ப்பட்டவழி ஐம்புலனும் விரைந்து செல்லுமாகலின், அங்ஙனம் சேராதவாறு காத்து என்றவாறு. மனத்தூய்மையும், சொல் தூய்மையும். மெய்த் தூய்மையும் என்றிம் மூன்றினால் மாட்சிமையுறுதல்.சிறு காலை - இளமை.'வேண்டி னுண்டாகத் துறக்க' என்பது திருக்குறள்.

ஐம்புல வின்பத்தினையே கருதித் துறத்தலைச் செய்யாதவர்கள், சுவை யொன்றனையே கருதி, விரைக் கோட்டையை நெருப்பிலிட்டுப் பொரித்துண்பவரோ டொப்பர்.கொல்லி தொழிலாகு பெயராய்த் தீயை உணர்த்திற்று.

'கொல்லிமேல் கொட்டு வைத்தார்' என்பது பழமொழி.

(2)