பக்கம் எண் :

28

(வி-ம்.) தன்வளி, அயல்வளி என்ற இடங்களில் வளி என்பது வளியான் உண்டாய நோய் என்னும் பொருளைக் குறிக்கின்றது. வாதத்தான் உண்டாகிய நோயைப் பால் முதலியவற்றால் நீக்குதலின் அயல்வளி தீர்த்தலாயிற்று. மழைக்காலங்களில் வீசும் சாரற்காற்றுக்காற்றாது ஆடுகள் நோய்வாய்ப் புகுதலின் சாரற் காற்றால் உண்டாகும் நோய் தன்வளி எனப்பட்டது. 'எங்கேனும் இடைப்புகுதல்' எனவே மக்கள் பிறர் குற்றங்களையும் பெருவிருப்பினர்என்பதைக் குறித்தாராயிற்று.

வெள்ளாடு தன்வளி தீராது அயல்வளிதீர்த்துவிடல் - இஃது இச்செய்யுளில் வந்தபழமொழி.

(5)

39. கெடுவல் எனப்பட்ட கண்ணும் தனக்கோர்
வடுவல்ல செய்தலே வேண்டும் - நெடுவரை
முற்றுநீர் ஆழி வரையகத்து ஈண்டிய
கல்தேயும் தேயாது சொல்.

(சொ-ள்.) நெடுவரை - பெரிய சக்கரவாளமாகிய மலைகளால், முற்றும் - சூழப்பட்ட, நீர் ஆழி வரை யகத்து - நீரை உடைய கடலால் வரையறுக்கப்பட்ட பூமியின்கண், ஈண்டிய கல் தேயும் - தொக்க மலைகள் தேய்வடையும், சொல் தேயாது - பழிச்சொல் மாறுதலில்லை. (ஆகையால்), கெடுதல் எனப்பட்ட கண்ணும் - (இவர்க்கு இத்தீங்கு செய்து பழியை எய்தாதொழியின்) யான் கெடுவேன் என்று கருதப்பட்ட இடத்தும், தனக்கு ஓர் வடுஅல்ல செய்தலே வேண்டும் - தனக்கு ஒருசிறிதும் பழியைப் பயவாத செயல்களைச் செய்தலையே ஒவ்வொருவனும் விரும்புதல்வேண்டும்.

(க-து.) தான் அழிய வரினும் பழியொடு பட்டவைகளைச் செய்யவேண்டா.

(வி-ம்.) மாறாது கிடத்தலால் பழியை வடு என்றார். நில்லாத உடம்பை ஒழித்து நிலையுடைய பழியை நீக்குக என்பார் 'வேண்டும்' என்றார். 'கெடுவல் எனப்பட்ட கண்ணும்'என்பது வடுவல்ல செய்தல் வேண்டும் என்பதை வலியுறுத்திற்று.

'கல் தேயும் சொல் தேயாது' என்பது இச்செய்யுளிற் கண்ட பழமொழி.

(6)

40. பொருந்தாப் பழியென்னும் பொல்லாப் பிணிக்கு
மருந்தாகி நிற்பதாம் மாட்சி - மருந்தின்
தணியாது விட்டக்கால் தண்கடல் சேர்ப்ப!
பிணியீ(டு) அழித்து விடும்.