பக்கம் எண் :

29

(சொ-ள்.) தண் கடல் சேர்ப்ப - குளிர்ந்த கடல் நாடனே!, மருந்தின் தணியாது விட்டக்கால் - (ஒருவர் கொண்ட நோயை) மருந்துகொண்டு நீக்காவிட்டால், பிணி ஈடு அழித்துவிடும் - அந்நோய் அவரது வலியைப் போக்கிவிடும். (ஆதலால்), பொருந்தாபழி என்னும் பொல்லா பிணிக்கு - பொருத்தமில்லாத பழி எனப்படும் தீய நோய்க்கு, மருந்தாகி நிற்பதாம் மாட்சி - அந் நோயைத் தீர்க்கும் பொருளாக நிற்பது ஒழுக்கமேயாம்; (அதுகொண்டுநீக்குதல் வேண்டும்.)

(க-து.) ஒருவன் தான் கொண்ட பழியைஒழுக்கத்தாலன்றி நீக்கமுடியாது.

(வி-ம்.) பழி ஒருவனுக்கு இழிவை எய்துவித்தலின் 'பொருந்தாப்பழி' என்று கூறப்பட்டது. பிணி தன்னுடையார் இறப்பத் தானும் நீங்கும் தன்மையது. பழிப்பிணி தங்குடியின் கண் உள்ளாரையும் தொடர்ந்து பற்றலின் ' பொல்லாப் பிணி'என்று கூறப்பட்டது.

'நன்னன் மருகன் அன்றியும் நீயும்
முயங்கற் கொத்தனை மன்னே வயங்குமொழிப்
பாடுநர்க் கடைத்த கதவின் ஆடுமழை
அணங்குசால் அடுக்கம் பொழியும்நும்
மணங்கமழ் மால்வரை வரைந்தனர் எமரே'

எனப் பெருந்தலைச் சாத்தனார் இளவிச்சிக்கோவைப்புல்லாததற்குக் கூறிய சான்றுகளாலும் இஃது அறியத்தக்கது. ஒழுக்கம் தன்னை யுடையானை மாட்சிமைப் படுத்தலின் ஈண்டு மாட்சிஒழுக்கமெனப்பட்டது.

'மருந்தின் தணியாது விட்டக்கால் பிணி ஈடு அழித்துவிடும்' -இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

நோயை மருந்துகொண்டே நீக்காவிடின் அந்நோய் கொண்டானது வலிமையைக் கெடுப்பது போன்று, பழிப்பிணியை ஒழுக்கமெனும் மருந்துகொண்டு நீக்காவிடின் கொண்டானுக்கு இழிவை எய்துவிக்கும்.

(7)

41. உரிஞ்சி நடப்பாரைஉள்ளடி நோவா
நெருஞ்சியும் செய்வ(து) ஒன்(று) இல்லை - செருந்தி
இருங்கழித் தாழும் எறிகடல் தண்சேர்ப்ப!
பெரும்பழியும் பேணாதார்க்கு இல்.

(சொ-ள்.) செருந்தி இருங்கழி தாழும் எறிகடல் தண் சேர்ப்ப - செருந்திமரங்கள் பெரிய உப்பங்கழியின்கண் தாழ்ந்து