பட்டவர்களுக்கும், துறவாதார் - விருந்தினர்க்கும், துப்பிலார் - வறியவர்க்கும், இறந்து தோன்றார் - காணப்படாத தென்புலத்தார்க்கும், ஈடு அற்றார் - தனக்கொப்பில்லாத ஏழைகட்கும்,இளையர் - துணையற்ற சிறுவர்கட்கும், சிறந்தவர்க்கும் - சான்றோர்க்கும், பழி இல் ஊண் - பழிக்கப்படுதலில்லாத உணவை, பால் படுத்தான் - பகுத்துக் கொடுத்தவன், மன்னன் ஆய் - மறுமையில் அரசனாய், மண் ஆளும் - உலகத்தை ஆள்வான். (ப-பொ-ரை.) பண்ணின் இனிமையை வென்ற சொல்லையுடையவளே! துறந்தவர்க்கும், துறவாதவராகிய பிரம்மச்சாரி வானப்பிரத்த னிவர்க்கும், வறியார்க்கும், தென்புலத்தார்க்கும், பலமற்றவர்க்கும், இவர்போல்வராகிய மற்றுஞ் சிறந்த தக்கார்க்கும் நல்வழியிலீட்டிய உணவை யளித் தன்பு செய்தவன் மறு பிறப்பில் பூமண்டலத்தையாளு மன்னனாவான். (க-து.) துறந்தார் முதலானவர்கட்கு ஊண் கொடுப்பவன் மறுமையில் அரசனாவான். இல்வாழ்வுடையவரே ஒரோவொருகால் பிறர் மனைக்கண் துறந்தார்போல் விருந்தினராய் வரலின், அவரை அத்துறவறத்தாரினின்றும் பிரித்தல் கருதித் ‘துறவா' ரென்றார்.பழியில் ஊண், அன்பொடு இடும் ஊண். செல்வம் பெருகுமென்றற்கு ‘மண்ணாளு மன்னனாய்' என்றார்.பண் ஆளும் என்பதற்கு இசையைக் கீழ்ப்படுத்தும் எனலுமாம்.துப்பு- ஐம்பொறிகளால் நுகரும் இனிய பொருள்களுக்குத் தொழிலாகு பெயர். "வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சின் மிசைவான் புலம்" (விருந்தோம்பல்-5) என்றார் பொய்யில்புலவரும். இனையர் என்றும் பாடம். (35) 36. காலில்லார் கண்ணில்லார் நாவில்லார் யாரையும் பாலில்லார் பற்றிய நூலில்லார் - சாலவும் ஆழப் படுமூ ணமைத்தா ரிமையவரால் வீழப் படுவார் விரைந்து. (இ-ள்.) கால் இல்லார் - முடவர்களுக்கும், கண் இல்லார் - குருடர்களுக்கும், நா இல்லார் - ஊமைகளுக்கும், யாரையும் பால் இல்லார் - ஒருவரையும் தஞ்சார்பில் உடையராயில்லாதவர்கட்கும், பற்றிய நுல் இல்லார் - பதிந்த நூலறிவு இல்லாதவர்
|